பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்.
பாஜக மகளிரணி நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை கைது செய்யக்கோரி சென்னையில் மகளிர் அணி சார்பில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அண்ணாமலை கைது செய்யப்பட்ட நிலையில் அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பாரதிய ஜனதா கட்சியின் நகரதலைவர்மணியழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் சாலையில் அமர்ந்து கண்டன கோஷம் எழுப்பினர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment