கடலூர் புனித அன்னாள் மேல்நிலை பள்ளியில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 November 2022

கடலூர் புனித அன்னாள் மேல்நிலை பள்ளியில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு.

கடலுார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   சக்திகணேசன்  அறிவுரையின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசன் வழிகாட்டுதலின் பேரில் இணையவழி குற்றபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா கடலூர் புனித அன்னாள் மேல்நிலை பள்ளியில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். செல்போனை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் தேவையில்லாத செயல்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது எனவும், ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுச்செய்தியில் வரும் தேவையற்ற Link யை Open செய்ய கூடாது ஆகிய இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் SR. டிரிஷா லிட்டில் பிளவர், இணையவழி குற்றபிரிவு உதவி ஆய்வாளர்  அய்யப்பராஜ். தலைமை காவலர் ஸ்டாலின், முதல்நிலை காவலர்  பாக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment