திட்டக்குடியில் ஜீவா ஆட்டோ ஓட்டுநர் சங்கம்(AITUC) மாவட்ட பேரவை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 20 November 2022

திட்டக்குடியில் ஜீவா ஆட்டோ ஓட்டுநர் சங்கம்(AITUC) மாவட்ட பேரவை கூட்டம்


கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ராமநத்தத்தில் ஜீவா ஆட்டோ ஓட்டுநர் சங்கம்(AITUC) மாவட்ட பேரவை கூட்டம் எம். சிவப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. 

பேரவை கூட்டத்திற்கு எ. தங்கராசு,என். பெரியசாமி,என்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை கூட்டத்தில் ஆட்டோ சங்க மாநில செயலாளர் பி.மாரியப்பன்,ஏஐடியூசி மாவட்ட தலைவர் பி.துரை,ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் வி.குளோப்,ஏஐடியூசி மாவட்ட குழு ஆர். சுப்பிரமணியன்,சிபிஐ மங்களூர் ஒன்றிய செயலாளர் எம் நிதிஉலகநாதன்,சிபிஐ நல்லூர் ஒன்றிய செயலாளர் வி பி முருகையன்,சிபிஐ ஒன்றிய குழு கே.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மாவட்ட தலைவராக வி.பி.முருகையன், மாவட்ட செயலாளராக எம். சிவப்பிரகாஷ், மாவட்ட பொருளாளராக எஸ். சரவணன், மாவட்ட துணைத் தலைவர்களாக எ.தங்கராசு, பி.செந்தில், மாவட்ட துணை செயலாளர்களாக என். பெரியசாமி, என். ஞானசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment