வடலூர் அருகே இருசக்கர வாகனத்திலன் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேய இருவர் பலி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 26 November 2022

வடலூர் அருகே இருசக்கர வாகனத்திலன் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேய இருவர் பலி

வடலூர் அருகே இருசக்கர வாகனத்திலன் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேய  இருவர் பலி. 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி பாட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் வயது 45 இவர் பார்வதிபுரம் கல்பட்டையா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரகலா வயது 38 மற்றும் ரோட்டு ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் வயது 48 ஆகியோருடன் தனது TN 32 AC  4282 ஹோண்டா சைன் மற்றும் TN 31 BR 2878 ஸ்கூட்டி வாகனத்தில் குறிஞ்சிப்பாடியில் இருந்து நெய்வேலி நோக்கி சென்றனர். 


அப்பொழுது வடலூர் பகுதியில் இருந்து  வந்த TN31AV 8961 என் கொண்ட ஈச்சர் லாரி எதிர்ப்பாராத விதமாக திருமுருகன்  ஓட்டிச் சென்ற ஹோண்டா ஷன் மற்றும் பின்னே  வந்த ஸ்கூட்டியின் மீது மோதியதில்  சந்திரகலா மற்றும் திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இதில் பலத்த காயம் அடைந்த சுகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் விபத்து குறித்து ஐயன் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்


லாரி மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியது

No comments:

Post a Comment