கடலூரில் இரவு பெய்த கன மழையால் கடலூர் மாநகராட்சி முதுநகர் பகுதி 38வது வட்டம் மோகன் சிங் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் குடிசைப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதையறிந்து கடலூர் மாநகர மேயர் திருமதி.சுந்தரி ராஜா உத்தரவின்படி கடலூர் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ்.ராஜா வழிகாட்டுதல்படி ஜே.சி.பி எந்திரம் மூலம் வடிக்கால் வாய்க்காலை அகலப்படுத்தி குடிசைப்பகுதிகளை சூழ்ந்திருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது. உடன் மாமன்ற உறுப்பினர் கவிதா ரகுராமன் மற்றும் அப்பகுதி தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்
No comments:
Post a Comment