விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்க அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் துவங்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 October 2022

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்க அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் துவங்கி வைத்தார்.

விருத்தாசலம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்க அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் துவங்கி வைத்தார்.



கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் விருத்தாசலம் நகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கட்டப்படவிருக்கும் நூற்றாண்டு விழா மண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா  தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பழனி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் நகர மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி ஜெயின் ஜுவல்லரி அகர்சந்த் விருத்தாசலம் வட்டாட்சியர் தனபதி காவல் ஆய்வாளர் முருகேசன் நகர செயலாளர் தண்டபாணி நகராட்சி ஆணையர்  சேகர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment