கடலூரில் பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் போட்டிகளில் காமாட்சி சண்முகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டியில் 11 தங்கப் பதக்கங்களையும் 7 வெள்ளி பதக்கங்களையும் ஆக மொத்தம் 18 பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு கடலூர் காமாட்சி சண்முகம் பள்ளியின் தாளாளர் பால சண்முகம் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றி ஊக்குவித்தார்.
மேலும் இவ்விழாவினை சிறப்பு செய்ய பள்ளியின் முதல்வர் பி .சுஜித்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருமான சி.தாஸ் மற்றும் சிவா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அனுராதா ஏற்பாடு செய்திருந்தார் இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment