குறிஞ்சிப்பாடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 August 2022

குறிஞ்சிப்பாடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

குறிஞ்சிப்பாடியில்  திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது


தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக கழக செயலாளர்  எம்.ஆர்.கே  பன்னீர்செல்வம் அவர்கள் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்  குறிஞ்சிப்பாடி கழக அலுவலகத்தில் அவைத் தலைவர் அவர்கள் தலைமையில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது


07-08-2022 அன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றியத்தில் உள்ள அணைத்து ஊராட்சி கிளைகளிலும் , நகராட்சி, பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும்  தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படைத்தை வைத்து மாலை அணிவித்து, நிணைவு அஞ்சலி செலுத்துமாறு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

மேலூரம் 12-08-2022 அன்று வடலூர் உள்ள மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் இளைஞர் அணி சார்பாக நடைபெற உள்ள திராவிட மாடல், நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் ஒன்றிய ,நகர பேரூர் ஆகிய பகுதியில் உள்ள இளைஞர் அணி தோழர்கள் 'வெண்மை நிற சீருடை அணிந்து வர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 


இக்கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர்   நாராயணசாமி அவர்கள், மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், குறிஞ்சிப்பாடி பேரூர் கழக செயலாளர், வடலூர் நகரக் கழக செயலாளர், மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment