ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வர்த்தக சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 28 July 2022

ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வர்த்தக சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை



குமராட்சி முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின்  ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி  வர்த்தக சங்கம் சார்பில்  2021 2022 கல்வியாண்டில் குமராட்சி அரசு மேல்நிலை ப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவரும் வர்த்தக சங்க தலைவருமான  திரு கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை நினைவு பரிசும் வழங்கப்பட்டது.


பள்ளியின் தலைமை  ஆசிரியர்   கே.ராஜா முன்னிலை வகித்தார் மேலும் இப்பள்ளியில் பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது 12ஆம் வகுப்பில் முதலிடம் பி புனிதவல்லி இரண்டாம் இடம் எஸ் கவுசல்யா மூன்றாம் இடம் தேவாம்பிகை பத்தாம் வகுப்பில் முதலிடம் வி தர்ஷினி இரண்டாம் இடம் பி திருவரசு மூன்றாம் இடம் ரேஷ்மாசி 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ஆர் சுப்பிரமணியன் கணிதம் கே நிர்மலா விலங்கியல் வி கலைவாணன் தாவரவியல் ஆர் புனித வெள்ளி கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது உடன் வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன்  துணைச்செயலாளர் துரைசிங்கம் துணைத்தலைவர் பார்த்தசாரதி பிரதீப் ஜெயின் நகைக்கடை உரிமையாளர்கள் மாதவசாமி செல்வம் செந்தில் ஜானகிராமன் வெங்கட்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் இறுதியாக  ஆசிரியர்  சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment