ராஜஸ்தான் மாநிலம் கர்நாலை சேர்ந்தவர் குமான், இவர் இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மகன் கிஷன் (20). இவர் விருத்தாசலம் இரட்டை தெருவில் தங்கி இருந்து இவரது உறவினர் ஆவட்டியில் வைத்திருக்கும் வட்டிக்கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் இன்று காலை 7:30 மணி அளவில் விருத்தாசலம் சந்திப்பு அருகே உள்ள நாச்சியார்பேட்டை என்ற இடத்தில், மங்களூரில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நடத்தப்பட முதற்கட்ட விசாரணையில் அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment