வடலூர் நகராட்சியில் நகர மன்ற ஆலோசனை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 28 July 2022

வடலூர் நகராட்சியில் நகர மன்ற ஆலோசனை கூட்டம்

வடலூர் நகராட்சியில் நகர மன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் அலுவலகத்தில் நகர மன்ற ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சு. சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பராயலு அவர்கள் வரவேற்புரை வழங்கினார் வடலூர் நகராட்சி 27 வார்டு உட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் வடலூர் நகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் குறிப்பாக நமக்கு நாமே திட்டம் 2022 -2023 கீழ் 48 லட்சத்திற்கான திட்டங்கள் மாருதி நகர் பகுதிகளிலும் வடலூர் நகராட்சியின் குடிநீர் வைப்புத் தொகை குறைப்பு மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நடேசன் நகர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு சுற்றியும் கூழாங்கற்களை கொண்டு நிரப்பும் பணி மற்றும் நகராட்சி சார்பில் துப்புரவு பணி மேற்கொள்ளும் துய்மை பணியாளர்களுக்கு காலனி வழங்குவது ஆகிய 25 தீர்மானங்கள் ஒருமானதாக நிறைவேற்றப்பட்டது

No comments:

Post a Comment