கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 186 ஆவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளான் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் MH.ஜவாஹிருல்லாஹ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் கே ஐ மணிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசியதாவது
பாரதிய ஜனதா கட்சி ஒரு டுபாக்கூர் பேர்வழிகள் என மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்,பி தமிழகத்தில் உள்ள கேடிகள், ரவுடிகள், சீட்டீங் பார்ட்டிகள் அனைவருக்கும் ஒன்று இணைந்து செயல்படுவது தான் பிஜேபி அரசு இதற்கு உறுதுணையாக இருப்பது அண்ணாமலை தான்.விரைவில் அனைவரையும் டைட் பண்ண போகிறோம்..
அப்ப தெரியும்,திமுக யார் என்று..
கர்நாடகத்தில் எஸ்.பி.யாக இருக்கும் போது ஒன்னும் கிழிக்க முடியவில்லை,தமிழகத்தில் வந்து
காவிதுண்டை போட்டு ஏமாற்றும்
டூபாக்கூர் கம்பனி பார்ட்டி
அண்ணாமலை...
கலவரத்தை தூண்டும் கட்சியாக பிஜேபி எனவும் சாடிய அமைச்சர்
மேலும் கஷடந்த 10 ஆண்டுகளில் அதிமுக நிதிகளை சுரண்டி விட்டதாகவும் தற்பொழுது ஆக்சன் முதல்வராக எங்கள் தளபதி செயல்பட்டு வருகிறார் பேசினார் கேரள மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கே பாலமுருகன்

No comments:
Post a Comment