முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடக்குபாளையம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அன்னதானம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வடக்கு பாளையம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றிய அமைப்பாளர் ச. மனோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளர் வெற்றிவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் சுமன் சந்திரன் ராம்போ முத்து தமிழ் பாரத் அருண் ஜீவா விக்கி சுமன் அப்பு மணிகண்டன் திலிப் உதயன் சந்தோஷ் வசந்த் திவான் ராம்கி நதிஷ் போன்றோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் ஊர் பொது மக்கள் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment