கடலூர் அருகே மூத்தமகன் அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக தாய் காவல் நிலையத்தில் புகார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 July 2022

கடலூர் அருகே மூத்தமகன் அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக தாய் காவல் நிலையத்தில் புகார்

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்குட்ப்பட்ட மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் வயது 60 என்பவர் HELLO SENIOR காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது மூத்த மகன் வேல்முருகன் என்பவர் தன்னையும் தனது கணவரையும் அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி பிரச்சனை செய்வதாக புகார் தெரிவித்ததன்பேரில் காடாம்புலியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூவராகவன் அவர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பழனியம்மாளின் மூத்தமகன் வேல்முருகன் இனிமேல் அப்பா அம்மாவிடம் எந்தவொரு பிரச்சனையும் செய்யமாட்டேன் எனவும், அப்பா அம்மா குடியிருப்பதற்கு வசிப்பதற்கு தனியாக குடிசை வீடு அமைத்து தருவதாகவும் உறுதியளித்தார், புகார்தாரரும் இதனை ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது


சேத்தியாத்தோப்பு சிறியநற்குணம் பகுதியைச் சார்ந்த கொளஞ்சியம்மாள் வயது 27 , என்பவர் Ladies First காவல் உதவி எண்ணை  தொடர்பு கொண்டு, அவரது கணவரை,  சேகர் என்பவர்  குடித்துவிட்டு தனது கணவரை அடித்துவிட்டதாக புகார் தெரிவித்தார்  உடனடியாக  சேத்தியாதோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர்   முத்து கிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, சேகர் என்பவரை விசாரணை செய்து கடுமையாக கண்டித்தார் , பின்னர் எதிர்மனுதாரர் சேகர் என்பவர் குடிபோதையில்  பேசி விட்டேன் என்னை மன்னித்து விடுமாறும், இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன் என மனுதாரரிடம் மன்னிப்பு கேட்டதால்  என எதிர் மனுதாரர் எழுதி கொடுத்ததின்பேரில், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. என்று மாவட்ட காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment