கடலூர் காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவில் 57 வது செடல் உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் தென் பெண்ணை ஆற்றங் கரையிலிருந்து கரகம் அலங்கரித்து ஊர்வலமாக வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பெண்கள் கஞ்சி கலயம் மற்றும் கூழ் குடங்களை கொண்டு வந்து அம்மனுக்கு படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் அவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருமதி.லீமா ஐயப்பன், மரு.பிரவீன் ஐயப்பன், ஆதிபெருமாள், கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் கீதாகுணசேகரன், பிரகாஷ், சரத் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செந்தில்,ராமு மற்றும் புது குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment