சீராள நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம், புவனகிரி சுற்றுவட்டார பகுதி பள்ளி மாணவர்களுக்கு எல். இளைய பெருமாள் மற்றும் அம்பேத்கர் அவர்களுடைய கல்விக்கு பெரிதும் உதவி செய்த சாகு மகாராஜா இவர்களின் பிறந்தநாளையொட்டி பிறந்த நாள் விழா கொண்டாட பட்டது.பின்பு ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு ஸ்மிட் பவுண்டேசன் சார்பாக கல்வி பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவனர் பேராசிரியர் முனைவர் ஜோதிமணி சீராளன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் தமிழரசி, கலைநிலா, நிவேதா, இளையசெல்வி, போன்ற பெண் ஆளுமைகளும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

No comments:
Post a Comment