கள்ளச் சாராயத்துக்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் செய்த கடலூர் தியாகிகள் தோழர்கள் குமார் -ஆனந்தன் 22ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அவர்கள் பிறந்த புதுப் பாளையத்தில் ரத்ததான முகாம் 26 .6 .2022 நடைபெற்றது .
இந்த ரத்ததான முகாமிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் NR.காந்தி தலைமை தாங்கினார் .வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் R.அமர்நாத், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் D.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் R.கலைச்செல்வன் , வழக்கறிஞர் சங்கத் தலைவர் M.ஜோதிலிங்கம், தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.அன்பரசன் . மாவட்ட செயலாளர் ஆர். பிரகலாதன் , வாலிபர் சங்கத்தின் கடலூர் நகர தலைவர் செந்தமிழ்செல்வன், கடலூர் ஒன்றிய தலைவர் கலைவாணன், செயலாளர் அரசன் , கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கவியரசன் பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர்கள் சிவலோகம், முரளி , குறிஞ்சிப்பாடி ஒன்றிய பொருளாளர் பாபு மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment