கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
இன்று 22.6.2022ம் தேதி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையில் உபயோகிக்கும் காவல் வாகனங்களை கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
காவல்துறை வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா எனவும் பார்வையிட்டும், வாகனங்களின் பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆயுதப்படை துணை காவல்கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:
Post a Comment