பண்ருட்டியில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 June 2022

பண்ருட்டியில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!!!


கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வடுகப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


முன்னதாக கங்கை நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு தேவதா அனுக்கை விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வாஸ்து சாந்தி முதற்கால யாக பூஜை இரண்டாவது கால யாகபூஜை 3வது கால யாகபூஜை நான்காவது கால யாக பூஜை போன்ற விசேஷ பூஜைகள் செய்து

கடம் புறப்பாடு நடைபெற்று ஊர்வலமாகச் சென்று ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய விமான கோபுர மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது 


இதில் அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் வி கே வெங்கட்ராமன் , முன்னாள் செயலாளர் பலராமன்,  ஊராட்சி மன்ற தலைவர்  சுந்தர் ,பகண்டை எழிலன், ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னாள் ஆசிரியர் புருஷோத்தமன், பாஸ்கரன். செல்வம், வெங்கடாச்சலம், முருகன், கண்ணன் நிர்வாக இயக்குனர் கண்ணன் மற்றும் வடுகப்பாளையம் கிராமத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 

No comments:

Post a Comment

*/