குச்சிப்பாளையம் கெடிலம் ஆற்றில் 7 குழந்தைகள் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் பிரேமே லதா விஜய்காந்த்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஏ குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் தடுப்பணையில் குளிக்கும்போது 3 பெண் 4 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 7 பேரின் குடும்பங்களுக்கு நேரில் சென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கி ஆறுதல் கூறினார்
அப்போது மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம், மாவட்ட துணை செயலாளர் ராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள் ஜான்சிராணி, அய்யனார், ஒன்றிய செயலாளர் தென்னரசு, நகர செயலாளர்கள் கஜேந்திரன், சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment