மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா.!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 June 2022

மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா.!!


தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த,இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் மற்றும் இதர பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக ரூ.90 இலட்சத்தில் 6 மாத இலவச பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 


அதனை தொடர்ந்து 3 மாத கால இலவச பயிற்சி 3 மையங்களில் நடத்துவதற்கு தகுந்த அரசாணையும் முதல் அணி பயிற்சிக்கு ரூபாய் 45 இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டது.


சென்னை,அதன்படி தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் படை தலைவர் முனைவர்.செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக தலா 40 பேர் கொண்ட 3 குழுக்களுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் இலவசப்பயிற்சி வகுப்புகள் கடலுார், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பயிற்சி மையங்களில் நடத்தப்பட்டது. 


பயிற்சியில் கலந்துக்கொண்ட 120 பேருக்கும் உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடுகள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் உடை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. இது தவிர ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் பிரதிமாதம் ரூ.1000/- உதவி தொகையாக வழங்கப்பட்டது.


மேற்படி பயிற்சி வகுப்புகள் கடந்த 14.03.2022 அன்று துவங்கப்பட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு அப்பயிற்சி 14.06.2022 அன்று நிறைவு பெற்றது. 

இப்பயிற்சியில் கலந்துக் கொண்டவர்கள் சம்மந்தப்பட்ட இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பற்படை மற்றும் இதர துறைகள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான தங்களது உடற்திறன் மற்றும் எழுத்துத்திறன் தகுதிகளை இச்சிறப்பு பயிற்சிகள் மூலம் மேம்படுத்தி கொண்டுள்ளனர்.


இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மையங்களில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுதல்களை தெரிவித்தார்கள். கடலூர் மையத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் முனைவர்.சந்தீப் மித்தல், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியின் சிறப்புகள் பற்றி கேட்டறிந்து பயிற்சி பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுதல்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக 40 பேர் கொண்ட மூன்று குழுக்களுக்கு மூன்று மாதகால இலவச பயிற்சி கூடிய விரைவில் நடத்துவதற்குநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

*/