கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பூவாலைகிழக்கு கிராமம் சமுதாயகூடத்தில் பேரிடர் மேலாண்மை- பொதுமக்கள் பேரிடர் மீட்புக் குழு மூலம் குறுவட்ட அளவிலான முதல்நிலை பேரிடர் மீட்பாளர்கள் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் பூவாலைகிழக்கு, மேற்கு, அலமேலுமங்காபுரம், மணிக்கொல்லை, வேளங்கிப்பட்டு, வயலாமூர்,தச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் பிரகாஷ்,பேரிடர் வருவாய் ஆய்வாளர் சஞ்சய், வருவாய் ஆய்வாளர் விக்டோரியா ராணி,மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ,கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாமில் பேரிடர் காலங்களில் இடர்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பதை குறித்த பயிற்சி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டது .

No comments:
Post a Comment