குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரப்பாளையம் கிராமத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின்படி குறிஞ்சிப்பாடி வட்டம் பாச்சாரப் பாளையம் கிராமத்தில் பொது விநியோக திட்ட குறை தீர் முகாம் பாச்சாரப் பாளையம் நியாய விலை கடையில் இன்று 14.05.2022 சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் ,நீக்கம் , முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை , கைப்பேசி எண் பதிவு மாற்றம் உள்ளிட்ட பொது விநியோக திட்ட சேவைகள் தொடர்பான மனுக்களை வட்ட வழங்கல் அலுவலர் பு.ரோகிணிராஜ் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டார், இம்முகாமில் குடிமைபொருள் தனிவருவாய் ஆய்வாளர் சுதாகர் , வட்ட பொறியாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment