குழந்தை வளர்ச்சித் திட்டம், மது மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

குழந்தை வளர்ச்சித் திட்டம், மது மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு


கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் மங்களூர் வட்டார வளர்ச்சி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மது மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்பாக 18.05.2022 காலை 11 மணியளவில் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கம் திருமதி சாய்ரா பானு தலைமையில் நடைபெற்றது.


அதில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் அதில் திருமதி ஜாக்லின் ஆசிரியர் மற்றும் நாட்டிய சிறகுகள் ஏஞ்சலின் சீரில் சிறப்பு விரிவுரையாளராக கலந்துகொண்டனர் மதியம் 3மணிக்கு அங்கன்வாடி பணியாளர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து திட்டக்குடி பேருந்து நிலையம் வரை மது ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

 

இப்பேரணியில் திட்டக்குடி சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேரணியை துவக்கி வைத்தார் அதன்பின் கடலூர் நாட்டிய சிறகுகள் மூலமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது நாட்டுப்பண் இசைக்க சிறப்பாக நடைபெற்றது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மங்களூர் வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மேற்பார்வையாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் அங்கன்வாடி உதவியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்

No comments:

Post a Comment

*/