நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி கரும்பு விவசாயிகள் ஆலை மட்ட சார்பில் ஈஐடி பாரி ஆலை நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்படி ஆர்ப்பாட்டம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், மாநில துணைச்செயலாளர், கோ.மாதவன், சிறப்புரை ஆற்றினார்கள்.
முன்னிலை மணி,சம்பத், DM.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1.எரிந்த கரும்பிற்கு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணத்தை திருப்பி கொடு....
2.தமிழக அரசு அறிவித்த கரும்பு ரகங்களுக்கு ஆலை நிர்வாகமே பதிவு செய்....
3. 2003-2004,2016-2017 க்கான கரும்பு பணம் ரூபாய் 158 கோடியை உடனே வழங்கிடவும்,
4.2ஆண்டு காலம் கரும்பில் கழிவு என்ற பெயரில் பிடித்தம் செய்த பணத்தை உடனே வழங்கு.....
5.கரும்பு நடவுக்கு மானியம் கொடுத்து விட்டு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணத்தை உடனே வழங்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment