கனகசபை சுவாமி தரிசனம் - அமைச்சர் சேகர்பாபுவுக்கு காங்கிரசார் சால்வை அணிவித்தனர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

கனகசபை சுவாமி தரிசனம் - அமைச்சர் சேகர்பாபுவுக்கு காங்கிரசார் சால்வை அணிவித்தனர்


கனகசபை சுவாமி தரிசனம் அமைச்சர் சேகர்பாபுவுக்கு காங்கிரசார் சால்வை அணிவித்தனர்.


உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவை நேரில் சந்தித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என் ராதா மாவட்ட மூத்த தலைவருமான ஆர்.சம்மந்தமூர்த்தி ஆர.டி.ஐ துறை மாநில பொது செயலாளர் பி.ஸ்டிபன்முத்துபா ண்டி ஆர்.டி.ஐ.துறை மாவட்ட துணை தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.


சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு உரிய நறுக்கி எடுத்து தக்க பாதுகாப்பு வழங்கிய கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கனேஷ்ஷை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/