பண்ருட்டி அடுத்த பெரிய பகண்டை கிராமத்தில் திரௌபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பெரிய பகண்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் முத்துமாரியம்மன் செடல் உற்சவம் மற்றும் தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக தீ மிதி திருவிழா கடக்காத நிலையில் இந்த வருடம் மிக சிறப்பாக தீ மிதி திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவை அருகில் உள்ள நான்கு ஐந்து கிராமங்களை சுற்றி உள்ள பொதுமக்கள் திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு களித்தனர்.
திருவிழாவில் மிக சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்த ஊர் பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி மகிழ்ந்தனர்


No comments:
Post a Comment