கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கபட்டது நிகழ்ச்சிக்கு குமராட்சி வட்டார தலைவர் பாபுராஜன் தலைமை தாங்கினார் பின்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இருக்கும் ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி மாவட்ட செயலாளர்கள் ஷானு பாய் அண்ணாதுரை மாவட்ட துணைத்தலைவர் நசீர் அஹமது முன்னாள் வட்டார தலைவர் ஜோதிபாசு வட்டார தலைவர்கள் காட்டுமன்னார்கோயில் மேற்கு சங்கர் நகர தலைவர் அன்வர் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜன் ராமதாஸ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்
செய்தியாளர்: கே, பாலமுருகன்

No comments:
Post a Comment