வேப்பூர் அருகே கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

வேப்பூர் அருகே கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த என்.நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் லெட்சுமி (வயது 28) என்பவருக்கும், சேவூர் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி மகன்  தினகரன என்பவருக்கும்  திருமணமாகி 4 ஆண்டுகளான நிலையில், தினகரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.அவ்வப்போது வந்து செல்வார் 


 இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லட்சுமி தனது கணவருக்கு போன் செய்து, குடும்ப செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், லட்சுமியை தினகரன் திட்டியுள்ளார் இதனால், மனமுடைந்த லட்சுமி அழுது கொண்டு  வீட்டிற்குள் ஓடி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மயக்க நிலையில் இருந்தவரை வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் லட்சுமி இறந்து விட்டதாக கூறினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/