கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட பரிந்துரை செய்த மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் பரிந்துரையை ஏற்று ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பது ,
மேலும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்து விவாதிக்கப்பட்டது இக்கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சக்தியாபர்வின் நிசார் அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வகுமார் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி ஜெயக்குமார் உதவி செயற் பொறியாளர்கள் சேரன் பாபு மனோகர் கணக்கர் பொது சதீஷ் குமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் பானுமதி நன்றி கூறினார்
செய்தியாளர் ; கே.பாலமுருகன்

No comments:
Post a Comment