விருத்தாசலத்தில் அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் ஸ்ரீ வாசவி அம்மன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மாவிளக்கு மாவில் அம்மன் பாதம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கடைவீதியில் உள்ள அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவிலில் ஸ்ரீ வாசவி அம்மன் ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சுமங்கலி பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் ஸ்ரீ வாசவி அம்மன் ஜெயந்தியை முன்னிட்டு அம்மனின் பாதம் மாவிளக்கு மாவில் செய்து வழிபட்டனர் மேலும் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் உலக அளவிலான கூட்டுப்பிரார்த்தனை செய்து உலக சாதனை நிகழ்ச்சிக்கு பங்கேற்றனர் இதில் தமிழ்நாடு ஆரிய வைசிய மகிலா விபாக் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் ஜீவிதா பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

No comments:
Post a Comment