காட்டுமன்னார்கோவில் அருகே கீழ் புளியம்பட்டு ஊராட்சி சார்பில் நந்தவன குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் கீழ்புளியம்பட்டு ஊராட்சியில் எய்யலூர் கிராமத்தில் நந்தவன குளம் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது, இந்த இடத்தை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன் வருவாய் ஆய்வாளர் சுஜாதா நில அலுவலர் நந்தினி கிராம நிர்வாக அலுவலர் அறிவரசன் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் ஊராட்சி வி பி ஆர் சி பிஎல்எப் கணக்காளர் தனலட்சுமி ஊர் கிராம தலைவர் ஜெகநாதன் தூய்மை காவலர் ஐயப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் தன்னார்வலர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்: கே.பாலமுருகன்

No comments:
Post a Comment