சுவாமி சகஜானந்தா குருபூஜை விழா ஆதிதிராவிடர் மகாசன சங்கம் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயிலில் சுவாமி சகஜானந்தா அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு ஆதிதிராவிட மகாஜன சங்கம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதிதிராவிட மகாஜன சங்க மாநிலத் தலைவர் எல் இ பி ஜோதிமணி தலைமையில் சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்பு அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் பிரட் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கீரை குமார் வட்டார தலைவர்கள் கிழக்கு தேவர் தாசன் மேற்கு மகேந்திரன் இளைஞரணி வட்டாரத் தலைவர் கண்ணதாசன் மற்றும் ஏராளமான ஆதிதிராவிட மகாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ் மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment