கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் கடந்த 14.04.2022 முதல் 20.04.2022 வரை தீ தொண்டு நாள் வார விழா நிலைய அலுவலர் மணி தலைமையில் நடைபெற்றது.
விருத்தாசலம் பகுதியில் பொதுமக்கள் கூடும் காய்கறி மார்க்கெட், கடைவீதி, பாலக்கரை, காட்டுக்கூடலூர் சாலை மற்றும் காஸ் சிலிண்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தூண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வின் போது நிலைய அலுவலர் போக்குவரத்து செந்தமிழ்வீரன், சிறப்பு போக்குவரத்து நடராஜ், மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:
Post a Comment