கடலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இருந்து திட்டக்குடிக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நேற்று இரவு சென்றுகொண்டிருந்தது. ஆ.பாளையம் என்ற இடத்தில் வந்தபோது அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழா ஊர்வலம் சாலையில் சென்றது. எதிர்பாராதவிதமாக சாமி ஊர்வலத்தில் பஸ் சென்றது. இதில் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்ட சாமி சிலை சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் வந்த 50 மேற்பட்ட இளைஞர்கள் அரசு பஸ்சின் டிரைவர் பெரியசாமியை வீட்டுக்குள் வைத்து சரமாரியாக சரமாரியாக தாக்கினர். அடித்ததில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார் நடத்துனர் அங்கிருந்து தப்பித்து ஓடி காவல்துறையிடம் தகவல் கொடுத்தார் காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் டிரைவரை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து சிலமணிநேர இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டன.
செய்தியாளர்; செ. பாலமுருகன்.


No comments:
Post a Comment