கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் சிறுதொண்ட நாயனார் அமுது படையல் கொடியேற்ற விழா
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திற்கு உட்பட்ட தவர்த்தாம்பட்டு கிராமம் எழுந்தருளி உள்ள உத்திராபதீஸ்வரர் ஆலயம் சிறுதொண்ட நாயனார் அமுது படையல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவானது இரண்டு நாட்கள் நடைபெறும் முதல் நாளான இன்று சீராளன் வீதி உலா உற்சவம் இரவு நடைபெறும் பின்பு நாளை தினம் அமாவாசை நாளன்று பரணி நட்சத்திரத்தில் சிறுதொண்ட நாயனார் சீராளன் அமுது படையல் படைத்துவிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியானது சீரும் சிறப்புமாக கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சவ திருவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment