ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டையில் ஸ்ரீ நாகப்புத்து மாரியம்மன் செடல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம்,ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி வாணியத் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ நாக புத்து மாரியம்மன் ஆலய 64 ஆம் ஆண்டு செடல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பாளையங்கோட்டை ஸ்ரீ நாகபுத்து மாரியம்மன் ஆலயத்தில் 19ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத்தொடர்ந்து பத்து நாள் தினமும் பாரதங்கள் படிக்கப்பட்டு அம்மன் வீதி உலா சென்று வரும் இன்று பதினோராம் நாள் அகலம் குளக்கரை சென்று கரகங்கள் சோடிக்கப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் செடல் அனிந்து அங்காளம்மன் பச்சைக்காளி மாரியம்மன் காளி வேடங்கள் அணிந்து பெரிய அலகு குத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
செய்தியாளர்;கே,பாலமுருகன்

No comments:
Post a Comment