கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாவதால் கோடைகாலத்தில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தர்பூசணி, மோர், தண்ணீர் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் ராஜ்கமல், மாவட்ட துணை செயலாளர்கள் வடிவேல், செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நகர பரிந்துரையாளர்கள் அஜய், பாலாஜி, மணிகண்டன், அப்துல் முக்ஷுத், மகேஸ்வரன், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மாவட்ட தலைவர் முத்துக்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:
Post a Comment