கடலூர் மாவட்டம்,கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலாஜி தலைமை தாங்கினார் செயல் அலுவலர் செல்வி தலைமை எழுத்தாளர் செல்வம் கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா துணைத் தலைவர் கிள்ளைரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதில் செவிலியர் ராஜலட்சுமி தமிழ்ச்செல்வி மருந்தாளர் வனஜா சுகாதார ஆய்வாளர் எட்வின்ராஜ்மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கலந்து கொண்டனர் முடிவில் சுகாதார ஆய்வாளர் அன்புராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர்; மா. பாலாஜி

No comments:
Post a Comment