வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்திய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியாக 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை உயர்த்தி தரக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு அறிவிப்பு விடுத்ததை அடுத்து விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:
Post a Comment