கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரியில் 5வது நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசின் சார்பில் G.O 45 அரசாணை படி தற்போது பயிலும் மாணவர்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்க வேண்டியும் தமிழக அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அதேபோல் பெறவேண்டுமென்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று அதன் ஒரு பகுதியாக,தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் மனித சங்கிலி அமைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்; மா.பாலாஜி.


No comments:
Post a Comment