சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் கல் லூரி மாணவர் விடுதிகளில் மடிக் கணினி, கைப்பேசிகள் திருட்டி ல் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்ப ரம் அண்ணாமலைநகர் போலீ ஸார் வியாழக்கிழமை உசுப்பூர் ரயில்வே கேட் அருகே ரோந் துப் பணியில் ஈடுபட்டனர். அப் போது, அந்த வழியாக வந்த ஆம் பூர் உடயராஜபாளையம் பட்டா லம்மன் தெருவைச் சேர்ந்த கணேஷ் மகன் மஞ்சன் (25), உட யராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப் பன் மகன் சுரேஷ் (26), சின்னண் ணன் மகன் ஒந்துகுகன் (26) ஆகி யோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண் டனர்.
இதில், இவர்கள் மூவரும் சிதம் பரத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் மடிக் கணினி, கைப்பேசிகளை திருடிவந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவ ரையும் கைதுசெய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 4 மடிக் கணினிகள், 8 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்: மா. பாலாஜி.

No comments:
Post a Comment