கடலூரில், உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்க மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 March 2022

கடலூரில், உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்க மனு


உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த நாட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். சிலர் மீட்கப்பட்டு உள்ளனர். இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ-மாணவிகள் அங்கு தவித்த நிலையில்,நேற்று 3 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் அங்கு தவித்து வருகின்றனர்.

 அதில் கடலூர் எம்.புதூரை சேர்ந்த உதயகுமார் என்ற மருத்துவ மாணவரும் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவதாக அவரது தந்தை இளம்வழுதி தெரிவித்துள்ளார்.
உதயகுமார் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு படிப்பதற்காக கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான் சென்றார். இந்த நிலையில் அந்த நாடு மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அவன் வசிக்கும் இடத்திலேயே குண்டுகள் வெடித்து வருவதால் மிகவும் பதற்றத்தில் இருப்பதாகவும். அவனோடு சேர்ந்து தமிழக மாணவர்கள் 38 பேர் இருப்பதாகவும், அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் கடந்த 5 நாட்களாக உணவு கிடைக்காமல் தவித்து வருகிற அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு சென்று ஏறினாலும், தமிழக மாணவர்களை உக்ரைன் மாணவர்கள் கீழே தள்ளி விடுகிறார்களாம். இதனால் அவனால் வர முடியவில்லை. இது வரை அவனுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை தந்தை இளம்வழுதி தெரிவித்துள்ளார்
 ஆகவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, அவனை பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் நேற்று மாலை இளம்வழுதி தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 
அந்த மனுவில், உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*/