"இயற்கை உர விற்பனை" - துவக்கி வைத்தார் மாவட்டம் ஆட்சியர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 25 February 2022

"இயற்கை உர விற்பனை" - துவக்கி வைத்தார் மாவட்டம் ஆட்சியர்



கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ உள்ளாட்சித்‌துறையின்‌ கீழ்‌ தூய்மை பாரத இயக்கத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ உற்பத்தி செய்யப்படும்‌ நுண்ணுயிர்‌உரம்‌ விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கி.பாலசுப்ரமணியம்‌, இஆப., அவர்கள்‌துவக்கிவைத்தார்‌.

கடலூர்‌ மாவட்டத்தில்‌ தூய்மை பாரத இயக்கத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ இயற்கை உரம்‌தயாரிக்க தலா ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நுண்ணுயிர்‌ உரக்‌ கூடம்‌ குறிஞ்சிப்பாடி ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட வடக்குத்து ஊராட்சி, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பரம்‌ ஊராட்சி, கீரப்பாளையம்‌ ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரப்பாளையம்‌ஊராட்சி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட c.கொத்தங்குடி ஊராட்சி,விருத்தாசலம்‌ ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி, நல்லூர்‌ ஊராட்சிஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர்‌ ஊராட்சி, மங்களுர்‌ ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராமநத்தம்‌ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில்‌ துவக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில்‌ உரம்‌ தயாரிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சுற்றியுள்ளஅங்காடிகள்‌, கடைகள்‌ ஆகியவற்றிலுள்ள காய்‌, கனி விற்பனை செய்யும்‌ கடைகளில்‌ விற்பனை செய்தது போக அடிப்பட்டு அழுகிப்போனவை மற்றும்‌ விற்பனை செய்ய இயலாத நிலையில்‌ உள்ளவை ஆகியவற்றினை தூய்மை பணியாளர்கள்‌ மூலம்‌ சேகரம்‌ செய்து இயற்கை உரம்‌தயாரிப்பதற்காக உள்ள மையங்களில்‌ உள்ள கொள்கலன்களில்‌ சேகரித்து குறிப்பிட்டகாலத்திற்கு வைத்திருந்து நொதிக்கச்செய்து இந்த இயற்கை உரம்‌ தயார்‌ செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌ தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்‌ தரத்தினை மாநில தரக்கட்டுப்பாட்டு அலுவலகம்‌மூலம்‌ பரிசோதிக்கப்பட்டு இரசாயன உரங்களைவிட அதிக அளவு பயிர்களுக்கு அனைத்துசத்துக்களும்‌ உள்ளது என தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை உரத்தினை 1கிலோ ரூ.10/- வீதம்‌ விவசாயிகளின்‌ பயன்பாட்டிற்கு இன்று (24.02.2022) விற்பனையை மாவட்டஆட்சியர்‌ அவர்கள்‌ துவக்கிவைத்தார்‌. மேலும்‌ தோட்டக்கலை துறைக்கு 2 உரக்கூடங்களில்‌இருந்து தலா 250 கிலோ வீதம்‌ இயற்கை உரம்‌ விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கானதொகை பெறப்பட்டு சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின்‌ வங்கி கணக்கில்‌ ஈடு செய்ய ஆவனசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) திட்ட இயக்குநர்‌ திரு.பவன்குமார்‌ஜி.கிரியப்பனவர்‌, இஆப.,அவர்கள்‌, தோட்டக்கலை துணை இயக்குநர்‌(பொ) திரு. அருண்‌,செயற்பொறியாளர்‌ (ஊரகவளர்ச்சித்துறை) திரு.தணிகாச்சலம்‌, உதவி இயக்குநர்‌ (பயிற்சி)திருமதி.விசாலாட்சி, உதவி திட்ட அலுவலர்‌ (வீடுகள்‌ மற்றும்‌ சுகாதாரம்‌) திரு. சேகர்‌, மாவட்டதிட்ட ஒருங்கிணைப்பாளர்‌ திரு.வேலுமணி, இராமநத்தம்‌ ஊராட்சி மன்றத்தலைவர்‌திரு.செல்லமுத்து, சிதம்பரம்‌  ஊராட்சி மன்றத்தலைவர்‌ திருமதி. பத்மசுந்தரிஉமாநாத்‌, விவசாயிகள்‌, சுய உதவிக்குழுவினர்‌, தூய்மை பணியளர்கள்‌ மற்றும்‌ அரசுஅலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

No comments:

Post a Comment

*/