கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், மாவட்ட கழக செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ, மாவட்ட கழக செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார், முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏக்கள் அருள், சிவசுப்பிரமணியன், கலைச்செல்வன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மீனவர் அணி தங்கமணி, பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், இளைஞரணி துணை செயலாளர் சி கே எஸ் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய குழுத்தலைவர் தெய்வ பக்கிரி, மாவட்ட இணை செயலாளர் உமா மகேஸ்வரி பாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஜி.எம்.வினோத், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, தகவல் தொழில் நுட்ப அணி வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர்கள் செந்தில்குமார், சந்திரகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.
No comments:
Post a Comment