அப்பாவைத் தேடி திட்டத்தில் 200 ஆதரவற்ற சாலையோர முதியவர்களுக்கு உணவு வழங்கிய ஸ்மீட்.
சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டத்தின் நகர பகுதிகளான சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்படி, பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட நகர்ப்புற சாலை ஓரமாக திரியும் சுமார் 200 ஆதரவற்ற முதியோர்களுக்கு வள்ளலாரின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்மீட் பவுண்டேசன் உருவாகியுள்ள அப்பாவைத் தேடி திட்டத்தின் மூலமாக ஆதரவற்ற சாலை ஓரமாக திரியும் முதியோர்களுக்கு உணவு வழங்கி பசிபிணி போக்கி வைக்கபட்டது. இந்நிகழ்வில் சீராளன் நினைவு கல்வி அதிகார கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் ஜோதிமணி சீராளன் கலந்து கொண்டு முதியவர்களுக்கு உணவு வழங்கினார்.
நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் அன்புசெழியன், தேவராஜன், கண்ணபிரான் ஜெயராஜ் உள்ளிட்ட கலந்து கொண்டு முதியவர்களுக்கு உணவு வழங்கினார்கள்.

No comments:
Post a Comment