வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு செயலாளர் எம்.பரணி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்த கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பரணியை சந்தித்து அவரது குடும்பத்தாரிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
உடன் கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.காசிநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆர்.ஏழுமலை, பொருளாளர் மோகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜெ. கண்ணன், கடலூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் ப.ஆதிநாராயணன், மாவட்ட கவுன்சிலர் கல்யாணி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் எம். கே.வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.

No comments:
Post a Comment