புவனகிரி அருகே வீடு இடிந்து விழுந்ததில் 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!!!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.கெளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணாமணி க/பெ சின்னதம்பி கூலித் தொழிலாளியான இவர் அதே கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென தொகுப்பு வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ள இருந்த சுமார் 30,000 மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது சம்பவத்தின் போது வீட்டினுள் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை தகவல் அறிந்த கொளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செங்கோடன் சின்ன மருது மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர கணேசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு புவனகிரி வட்டாட்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

.jpg)
No comments:
Post a Comment