பண்ருட்டியில் ரூ1.50 லட்சம்மதிப்பிலான ஒளிரும் சோலார் பேரிகார்டுகள் வழங்கும் விழா.
பண்ருட்டியில் பெருகி வரும் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் எடுத்து வருகின்றனர்.
பண்ருட்டி கடலூர்சாலை, சித்தூர் சாலை, சென்னைசாலை, கும்பகோணம் சாலை ஆகியரோடுகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க கடலூர் எஸ்.பி. பண்ருட்டி டிஎஸ்பி ஆகியோர் உத்தரவுபடி பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன் தலைமையில் பண்ருட்டி சாலைகளில் சோலார் ஒளிரும் பேரிகார்டுகள் அமைக்க முடிவு செய்தனர்.
பண்ருட்டி பனிக்கண்குப்பம் செயின்ட் பால் சிபிஎஸ் இபப்ளிக் பள்ளிதாளாளர் கிருபாகரன் ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான ஒளிரும்சோலார் பேரிக்காடுகளை தயாரித்து வழங்கினார். பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா அவர்களிடம் வழங்கினார்.

No comments:
Post a Comment