கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள மணல்மேடு கிராமத்தில் சுமார் 600 மலைவாழ் குறவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு சாதி சான்று தேவைப்படுவதால் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சாதி சான்று கேட்டு பலமுறை மனு அளித்தும் சாதி சான்று மலைவாழ் குறவர் என்று வழங்காமல் மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்து ஜாதி சான்று வழங்குவதாக கூறி மலைவாழ்குறவர் இனத்தினர் பயன்படுத்தும், முறம் பின்னுதல் காட்டு பூனை பிடிக்கும் வளையம், இடிக்கி,வலை உள்ளிட்டவைகளுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் எடுத்து வந்து தரையில் அமர்ந்து முறம் கூடை பின்னி பள்ளி குழந்தைகளுடன் நூதன முறையில் தர்ணா தமிழக வாழ்வுரிமை கட்சி விருத்தாசலம் நகர செயலாளர் பி.ஜி.சேகர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ந.அறிவழகன் சிறப்புரையாற்றினார் .
இது பற்றி தகவல் அறிந்து வந்த சார் ஆட்சியர் பழனி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்போது சிறுவன் ஒருவர் சாதி சான்று இல்லை என தன்னை பள்ளியில் சேர்க்க மறுத்து வருவதாக கூறினார் இதற்கு சார் ஆட்சியர் உரிய விசாரணை செய்து சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடன் மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேந்தர்.
No comments:
Post a Comment